சத்தியமா நீ நினைக்கிற மாதிரி எதுவுமே நடக்கல 3 Like

ரெஸ்டாரன்ட்டிற்குள் நுழைந்து இருவரும் எதிர் எதிர் டேபிளில் இருக்க “ சொல்லு என்ன சாப்பிட போற .. “ என்றான் கார்த்திக்.

“ நீங்களே எனக்கு ஆர்டர் பண்ணுங்க மாமா….. “

“ ஆஆஆஅ. முதல்ல இந்த மாமான்னு சொல்றத நிறுத்து. கேவலமா இருக்கு. இம்சை பண்ணாம என்ன வேணுமோ வாங்கி சாப்பிடு… “

“ அப்போ உங்கள நான் எப்படி கூப்பிடுறது. டேய் ன்னு கூப்பிடவா. “

“ ஏய் என்ன காமெடியா. பேரை சொல்லியே கூப்பிடு. “

“ அது எப்படி கட்டின புருஷன பேர் சொல்லி கூப்பிடுறது. அது நம்ம கலாச்சாரம்ல கிடையாதே. “

“ டின்னு கூப்பிடுறதுக்கு அது எவ்ளோ பரவா இல்ல. முதல்ல நீ சாபிட்டுட்டு போன் பண்ணு. “

“ சரிங்க.”

ராஜி தனக்கு தேவையானவற்றை சொல்லி ஆர்டர் செய்தாள். கார்த்திக் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி விட்டான். 20 நிமிடம் ரெஸ்டாரன்ட்டில் கழிய சாபிட்டு முடித்தவுடன் “ சரி சாப்பிட்டியா “ என்றான்.

“ ம்ம்ம் சாப்பிட்டேன். “

“ நல்லா சாப்பிட்டேன். “

“ வேற எதாச்சும் வேணுமா. “

“ இல்ல நோ தேங்க்ஸ். “

“ எல்லாம் முடிஞ்சுதுள்ள. இப்போ ஹாப்பியா இருக்கியா. “

“ குமுதா ஹாப்பி அண்ணாச்சி. “

“ சரி இப்போ அம்மாக்கு கால் பண்ணி பேசு. “

“ இருங்க அதுக்குள்ள என்ன அவசரம். எனக்கு ஷாப்பிங் போகணும். கூட்டிட்டு போறீங்களா. “

“ என்னது ஷாப்பிங்கா. உன் மனசுல என்ன பத்தி என்ன நினைச்சிட்டு இருக்க, முடியாது. நோ வே. நான் என்ன நீ வச்ச டிரைவரா. மரியாதையா போனை போடுடி. “

“ முடியாதுங்க. நீங்க வேணும்னா போங்க. நான் ஆட்டோ பிடிச்சி போய்கிடுறேன். ஆனா நான் கால் பண்ண மாட்டேன். அத்தைகிட்ட நீங்களே பேசிக்கோங்க. “

( சமையம் பார்த்து காலை வாருறாலே. போவோம் கார்த்திக். முதல்ல ஊருக்கு போவோம். அதுக்கு அப்புறம் இவள ஒரு வழி பண்ணுவோம். )

“ சரி கிளம்பலாம். “

“ எங்க. “

“ ஏதோ ஷாப்பிங் போகணும்னு சொன்னீங்களே. கிளம்பு போகலாம். “

“ குட் பாய். “ பேக்கை எடுத்து கொண்டு போகலாம் மாமா. என்றாள்.

ரெஸ்டாரன்ட்டிற்கு வெளியே இருவரும் வந்து பைக்கை எடுக்க ராஜி கார்த்திக்கை நிறுத்தினாள்….

“ மாமா மாமா ஒரு நிமிஷம். “

“ என்ன எதையாச்சும் மறந்து வச்சிட்டு வந்துட்டியா. “

“ இல்ல மாமா எனக்கு ஒன்னு வேணும். “

“ என்ன வேணும். “

“ அது. ப்ளீஸ் மாமா. “

“ எது “ என்று அவள் கை காட்டிய திசையை பார்க்க அங்கு பஞ்சு மிட்டாய் இருந்தது.

´பஞ்சு மிட்டாய்யா. “

“ ஆமா மாமா. வங்கி கொடுங்க. “

“ நீ என்ன சின்ன குழந்தையா. பஞ்சு மிட்டாய் சாப்பிடுரதுக்கு. “

“ இப்போ வாங்கி கொடுப்பீங்களா. இல்ல நான் போகட்டுமா. “

“ இம்சை இம்சை. வந்து தொலை. “

பஞ்சு மிட்டாய் வாங்கி கொடுக்க ராஜி ரசித்து ரசித்து சாப்பிட்டாள். குழந்தை சாப்பிடுவது போல ம்ம்ம்ம் ம்ம்ம்ம் என்று சாபிட்டாள். உங்களுக்கு என்பது போல கேட்க ப்ச் என்று தலையை திருப்பி கொண்டான்.

அவன் தலையை திருப்பி கொண்டாலும் தானாகவே அவள் பஞ்சு மிட்டாய் சாப்பிடும் சாப்பிடும் அழகை பார்க்க திரும்பியது.

(ம்ம்ம்ம் கார்த்தி நோஓஓஓஒ. திரும்பாத. ) கன்னத்தில் தட்டி கொண்டு வேறு எங்கோ வெறித்தான்.

“ முடிஞ்சுது. போகலாமா மாமா. “

“ உனக்கு இதான் முதலும் கடைசியும். மாமானு கூப்பிடாதன்னு எத்தனை தடவை உன்கிட்ட சொல்லுறது. “

“ நான் என்ன மாமா செய்யட்டும். உங்களை பார்த்தாலே எனக்கு அப்படிதான் கூப்பிட தோணுது. “

“ உன்னை எல்லாம் திருத்தவே முடியாது. “

அந்நேரம் போன் அடிப்பது இருக்க கார்த்திக் போனை எடுத்து பார்த்தான். அவனுக்கு எந்த காலும் வராததால் ராஜி போனை எடுத்து பார்க்க சொன்னான்.

“ உன் போன் தான் ரிங் ஆகுது. யாருன்னு பாரு. அம்மா தான. “

“ என் போனா. இருங்க பார்க்குறேன். “ எடுத்து பார்த்தாள்.

“ இல்ல மீரா கால் பண்றா. எங்க இருக்கான்னு கேட்குறதுக்காக கால் பண்றான்னு நினைக்கிறேன்.”

“ ஹேய் அட்டென்ட் பண்ணிடாத. சைலேன்ட்ல போடு. அப்புறமா பேசு. “

“ ம்ம்ம் சரி. “ சொல்லி விட்டு போனை எடுத்து பேக்கில் வைத்து கொண்டாள்.

பின் இருவரும் டிரஸ் எடுக்க போத்தீஸ் சென்றனர். இருவரும் லேடீஸ் செக்ஷன் சென்று ராஜிக்கு புடவை எடுக்க சென்றனர்.

“ நீ சாரி எல்லாம் கட்டுவியா. “

“ கட்டுவேனே. எனக்கு சுடிதார் விட சாரி தான் அதிகமா பிடிக்கும். ஆனா இங்க சாரி கட்டினா எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. ஆமா நீங்க ஏன் கேட்குறீங்க. “

“ இல்ல. சாரி கட்டுற பொண்ணுங்க எல்லாம் டைனோசர் காலத்துலயே அழிஞ்சி போயிட்டதா ரீசெர்ச் சொல்லுது. நீ இருக்கியே அதான் கேட்டேன். “

“ ஹீ ஹீ. நல்லா காமெடி சிரிச்சிட்டேன். சரி எனக்கு எந்த கலர் நல்லா இருக்கும்னு பார்த்து சாரி ஒன்னு செலக்ட் பண்ணுங்க.”

“ என்ன விளையாடுறியா. விட்டா இங்கயே ரூம் புக் பண்ணி பர்ஸ்ட் நைட் வைக்க சொல்லுவ போல. இங்க ஆரம்பிச்சி அடுத்து லவ்ல வந்து நிப்ப. உனக்கு தேவையானதை எடுத்துக்கோ. எதுவா இருந்தாலும் சரி.”

“ அப்படியா சரி. “. ராஜி ஒவ்வொன்றாக தோளில் வைத்து பார்த்து கொண்டிருந்தாள். கார்த்திக் வேண்டா வெறுப்பாக அவளை பார்க்க அதில் தங்க ஜரிகையில் நெய்த வெளிர் ரோஸ் நிற புடவை அவளுக்கு அட்டகாசமாக இருந்தது.

கார்த்திக் நல்லா இருக்கு என்று சொல்ல வாய் எடுக்க சொல்லாமல் அமைதியானான்.

ராஜி வேண்டும் என்றே நல்லா இல்லை என்று வேறு வேறு புடவைகளை பார்த்து கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்கும் அந்த புடவையே பிடித்திருந்தது. கார்த்திக் வாயாலே அதை எடுக்க சொல்ல வேண்டும் என்பதற்காக நேரத்தை கடத்தினாள்.

“ முடிஞ்சுத இன்னும் எவ்ளோ நேரம், தான் பார்த்துட்டு இருப்ப, சீக்கிரம் எடு. “

“ இருங்க ஆங். இது நல்லா இருக்குள்ள. “ ஆரஞ்சு நிறத்தில் கேவலமாக இருந்த ஒரு புடவையை வேண்டும் என்றே பிடித்திருப்பதாக கார்த்திக்கிடம் காட்டினாள்.

“ வ்வ்வ்வவ்வா. கலராடி இது. அசிங்கமா இருக்கு. உனக்கு ஒரு டேஸ்டே கிடையாத. நான் கூட சாரி கட்ட பிடிக்கும்னு நீ சொன்னதும் உன்னைய பத்தி என்னமோ நினைச்சேன். ஆனா இவ்ளோ மட்டமா இருக்கும்னு நான் நினைக்கவே இல்ல. “

“ அதான் நீங்க எடுத்து கொடுங்கன்னு சொன்னேன். இப்போ திட்டுறீங்க. “

“ இதை எடு.” என்று அவன் பார்த்த தங்க ஜரிகையில் நெய்த வெளிர் ரோஸ் நிற புடவையை அவளிடம் கொடுத்தான்.

“ உன்னோட கலருக்கும் இந்த கலருக்கும் நல்லா மேட்சா இருக்கும். பிடி. இதை பில் போட்டுடுங்க. “ சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

“ ராஜி அவனையே பார்த்து கொண்டிருக்க நடப்பது எல்லாம் கனவா இல்ல நனவா என நம்ப முடியாதவள் போல அவன் பின்னால் மந்திரித்து விட்டது போல சென்றாள்.

மருபடியும் போன் அடிக்க ராஜி போனை எடுத்து பார்த்தாள்.

“ இப்போவும் மீரா தானா. “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *