பவித்ரமான பவித்ரா 108

அருகில் வந்த மகள் காவ்யாவின் தலையில் நங்கென்று பலமாகவே குட்டிய புவனா, என்னடி வாய் ஓவரா நீளுது. மாப்பிள்ளை கிட்டே மரியாதையா பேச கத்துக்க என்றாள். தலையை தடவிக் கொண்டே, நீயெல்லாம் ஒரு அம்மாவா? மருமகனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு மக தலைலே இப்படி குட்டுறே என்று தன் அப்பாவின் அருகில் சென்று அமர்ந்தாள். காவ்யா மாதவனின் போட்டோ

ராஜேந்திரன் மகளின் சிணுங்கிய முகத்தை கண்டு சிரித்துக் கொண்டே, சரி அதென்ன மேக்கப் ஆர்ட்டிஸ்ட்? ரமேஷுக்கு மேக்கப் போட போறீங்களா என்ன? என்றார். அதை கேட்டு சத்தமாக சிரித்த மாதவன் மேக்கப் கல்யாண மாப்பிள்ளைக்கு இல்லை மாமா. உங்க பொண்ணுக்கு தான். கல்யாணமாகி அஞ்சு வருசம் ஆக போகுது. என்னமோ இவளுக்கு கல்யாணம் மாதிரி மேக்கப் போட தனியா ஒரு ஆர்ட்டிஸ்ட்டை வர சொல்லிருக்கா. அதுக்கு சார்ஜ் 25000. எல்லாம் கம்பெனி கணக்கு என்றான்.

சரி விடுங்க மாப்பிள்ளை, தினமுமா செய்றா. தம்பிக்கு நிச்சயதார்த்தம். நாலு பேரு வருவாங்க போவாங்க. அவங்க முன்னாடி கொஞ்சம் அழகா தெரியனும்ன்னு செலவு பண்றதிலே என்ன தப்பு என்றார் ராஜேந்திரன் மகளுக்கு ஆதரவாக. இந்த கேலி கிண்டலால் காவ்யாவின் முகம் வாடுவதை கவனித்த மாதவன் அதுக்கு சொல்லலை மாமா… காவ்யா இயற்கையாவே அழகு தானே மாமா. அவளுக்கு மேக்கப் எல்லாம் அவசியமே இல்லைன்னு சொல்ல வந்தேன் என்று சொல்ல அவனை நோக்கி பழிப்பு காட்டினாள் காவ்யா.

ராஜேந்திரன் மருமகனின் சாமர்த்தியத்தை கண்டு சரியான ஆளு மாப்பிள்ளை நீங்க. இல்லைன்னா என் ரவுடி பொண்ணு காவ்யா கூட குப்பை கொட்ட முடியுமா என்று சொல்லி விட்டு டீயை குடிக்க துவங்கினார். புவனா மருமகன் மாதவனை பார்த்து ஒரு நமட்டு சிரிப்பு சிரித்து விட்டு சமையலறை வேலைகளை கவனிக்க உள்ளே சென்று விட்டாள்.

இந்த பேச்சுகள் எதிலும் கலந்துக் கொள்ளாமல், கையில் மொபைலை வைத்து நோண்டிக் கொண்டு, வேறு எதிலோ கவனமாக இருந்த ரமேஷ் தான் இந்த கதையின் கதாநாயகன். 27 வயது இளம் காளை. அப்பாவின் எலக்ட்ரிகல் ஏஜென்சியில் பார்ட்னராக இருக்கிறான். எம்.பி.ஏ முடித்தவன். இன்று அவனுக்கு தான் நிச்சயதார்த்தம்.

அப்பா ராஜேந்திரன், நகரில் மிகப் பெரிய எலக்ட்ரிகல் ஏஜென்சியின் ஓனர். இப்பொழுது 55 வயது. தன் 40 வயது முதல் லீடிங் கம்பெனிகளின் பொருட்களுக்கு பெரிய அளவில் டீலர்ஷிப் எடுத்து ரிடெய்ல் ஹோல் சேல் என்று பிஸினெஸ் நடத்தி வருகிறார். இரண்டு ஷோ ரூம்களும் உண்டு. புவனா ரமேஷின் அம்மா. அவளும் கல்லூரி வரை சென்று படித்தவள் என்றாலும் வீட்டோடு சரி. ஒரு குணமான நல்ல இல்லத்தரசியாக ராஜேந்திரன் குடும்பத்தின் ஹோம் மேக்கர். 49 வயது குடும்ப தலைவி. இவர்களுடைய ஒரே மகள், முதல் வாரிசு காவ்யா. இப்போது வயது 29. ஆனால் பார்த்தால் இருபது என்று சொல்லக் கூடிய அளவுக்கு அழகு பிசாசு. கொஞ்சம் சேட்டை பிடித்த பெண். அவளுடைய காதல் கணவன் மாதவன். வயது 31. மாமனார் ஐம்பது வயதை கடந்து விட்டதால் தான் பார்த்து வந்த வேலையை உதறி விட்டு வீட்டோடு மாப்பிள்ளையாக மாமனாரின் பிஸினெஸ்ஸில் பார்ட்னராக சேர்ந்துக் கொண்டவன்.

ரமேஷ்…

கதையின் நாயகன். கதாநாயகன். வயது 27. இவனும் எம்.பி.ஏ படித்திருக்கிறான். அப்பாவின் பிஸினெஸ்ஸுல் வொர்க்கிங் பார்ட்னர் இவன் தான். கிட்டத்தட்ட முதலாளி இவன் தான். 25 வயதில் அப்பாவின் பிஸினெஸ்ஸுல் இணைத்துக் கொண்டு, இரண்டே வருடத்தில் அபாரமான வளர்ச்சியடைந்து, ஆறு மாதங்கள் முன் தான் அவர்கள் அதுவரை இருந்த பரம்பரை சொத்தான பழைய கால வீட்டை காலி செய்து விட்டு, ரமேஷின் மேற்பார்வையில் கட்டி முடிக்கப்பட்ட மூன்று ப்ளோர் கொண்ட ஆடம்பர பங்களாவுக்கு குடி பெயர்ந்தனர்.

காவ்யா (ரமேஷின் அக்கா)

ரமேஷ் பார்க்க வட இந்திய கதாநாயகன் போல மீசை இல்லாமல் மிகவும் இளமையாக கலராக இருப்பான். சாக்லெட் பாய். மிகவும் மென்மையானவன். வீடு கட்டி குடி வந்த ராசியோ என்னமோ, அவனுக்கு திருமணமும் உடனே கூடி வந்து விட்டது.

இது தான் நம் கதாநாயகன் ரமேஷின் விவரம் அவன் குடும்பத்தின் விவரம். சரி இனி நம் கதாநாயகன் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகும் பெண், நம் கதையின் கதாநாயகி யாரென்று பார்ப்போமா. வாருங்கள், பெண் வீட்டுக்கு போவோம்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.

அதிகாலை ஐந்து மணிக்கு தூக்கம் களைந்து எழுந்தவளுக்கு தாகம் எடுக்கவே, இரவு உறங்க போகும் போது கொண்டு வந்து அறையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து பார்த்தவள், இரவு ரமேஷுடன் சாட் செய்துக் கொண்டிருந்த போது கொஞ்சம் கொஞ்சமாக குடித்ததில் பாட்டில் காலியாகி இருப்பதை கண்டு, இரவு ரமேஷுடன் சாட்டிங்கில் நேரம் போனது தெரியாமல் மெசெஜ் அனுப்பிக் கொண்டு தூக்கமிழந்ததால், இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் போல தோன்றினாலும், தாகத்தை அடக்க முடியாமல் சமையலறைக்குப் போய் தண்ணீர் குடித்து விட்டு வந்து மீண்டும் தூக்கத்தை தொடரலாம் என்று தண்ணீர் குடிப்பதற்காக சமையலறைக்கு வந்து, வாட்டர் ப்யூரிஃபையரிலிருந்து பாட்டிலில் தண்ணீர் பிடித்து குடித்து விட்டு மீண்டும் பாட்டில் நிறைய தண்ணீரை நிரப்பிக் கொண்டு வெளியே வந்தவள் சமையலறையை ஒட்டி அமைந்திருந்த தன் பெற்றோரின் பெட்ரூமில் தன் அம்மா கல்பனாவும் அப்பா சந்திரனும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு வெட்கத்துடன் தன் அறைக்கு ஓடினாள் பவித்ரா என்னும் இந்த கதையின் கதாநாயகி.

அப்பா அம்மா தங்களுடைய ரூமிலிருந்து வெளியே வருவதற்குள் ஓடிப் போய் தன்னுடைய அறைக்குள் புகுந்துக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் இருவரின் கண்ணிலும் பட்டு அவர்கள் இவளை அதையும் இதையும் சொல்லி கேலி கிண்டல் செய்வார்கள் என்று திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு ஓடிய பவித்ரா தன்னுடைய அறை வாசலில் ஒரு வளர்ந்து கெட்டவனின் மேல் போய் நேராக மோதிக் கொண்டாள்.

அது வேறு யாருமில்லை. பவித்ராவின் அன்பு அண்ணன் இளங்கோ தான். தன் மீது பஞ்சு மூட்டை போல வந்து விழுந்த தன் செல்லத் தங்கையின் பாரத்தை தாங்க முடியாமல் ஒரு நொடி தடுமாறிய இளங்கோ இருவரும் மோதிய வேகத்தில் கீழே விழுந்து விடாமல் இருக்க பவித்ராவை கட்டிப் பிடித்துக் கொண்டு ஒரு வழியாக சமாளித்து நின்றான்.

எரும மாடே… என்னடி இப்படி வந்து மோதுறே…

யாருடா எரும மாடு… நீதான் எரும… பன்னி…. குரங்கு… மாடு… மாடு என்று தன்னை அணைத்துக் கொண்டிருந்த தன் அண்ணனின் நெஞ்சில் படபடவென்று கைகளால் குத்தினாள் பவித்ரா. பவித்ராவை விட மூன்று வருடங்கள் மூத்தவன் என்றாலும் பவித்ரா அவனை அண்ணா என்று அழைப்பதை விட வாடா போடா என்று அழைப்பது தான் அதிகம். அது போக அவ்வப்போது இப்படி மாடு எருமை என்றெல்லாமும் சொல்வாள். பதிலுக்கு இளங்கோவும் விட மாட்டான். தன் தங்கையை அவனும் வாடி போடி என்று அழைப்பதோடு வெள்ளைக் குரங்கு… மலையாடு… என்று வாயில் வந்த பட்டப் பெயரெல்லாம் சொல்லி கூப்பிடுவான்.

அண்ணன் தங்கை என்றாலும் அன்பாக பழகிய நாட்களை விட அடித்துக் கொண்டு சண்டை போடும் நாட்களே அதிகம். தினமும் இருவருக்கும் வீட்டில் சண்டை மட்டும் ஓயவே ஓயாது. பல சமயங்களில் அது அடிதடி வரை போகும். இருவரும் சண்டை போட்டுக் கொண்டு சில நாட்கள் ஒருவரிடம் ஒருவர் பேசாமல் இருந்த நாட்களும் உண்டு.

ஆனால் இத்தனை இருந்தாலும் இளங்கோ தன் தங்கை மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தான். அவளுக்கு ஒன்று என்றால் துடித்து போய் விடுவான். பருவத்தின் வாசலில் தங்க பதுமையாக திரண்டு நிற்கும் தன் அழகு தங்கச்சியின் மேல் யாருடைய கை மட்டுமல்ல கண் கூட படாத அளவுக்கு அவளுக்கு பாதுகாவலனாய் இருந்தான். பவித்ராவுக்கும் தன் அண்ணனின் அன்பு தெரியும். அவளுக்கும் அண்ணன் என்றால் உயிர் தான். அவனுடைய துணை இல்லாமல் அல்லது அனுமதி இல்லாமல் அவள் வெளியில் எங்குமே போக மாட்டாள். ஆனால் இருவருமே தங்கள் அன்பை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் எந்நேரமும் சண்டைக் கோழிகள் போல அடித்துக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்.

அண்ணங்கற மரியாதை இல்லாம இப்படி வாய் பேசுறே. உன்னை கட்டிக்க போற அந்த அப்பாவி உன் கிட்டே சிக்கிட்டு என்ன பாடு பட போறானோ, என்று தங்கையை தன் அணைப்பிலிருந்து விடுவித்தவன் அவளை போக விடாமல் அவள் ஜடையை பிடித்து இழுத்து சீண்டினான் இளங்கோ. வலியில் கத்திய படி நான் கட்டிக்கப் போறவனை என்ன பாடு படுத்தனும்ன்னு எனக்கு தெரியும். நீ உன் வேலையை பாருடா தடிமாடு என்று ஜடையை அண்ணனிடமிருந்து பிடுங்கிய பவித்ரா திரும்பி போவது போல போக்கு காட்டி விட்டு திடீரென்று அண்ணன் முதுகில் பளார் என்று ஓங்கி ஒரு அறை வைத்து விட்டு ஓட, கடுப்பான இளங்கோ தங்கையை துரத்திக் கொண்டு போய் அவள் அவளுடைய அறைக்குள் நுழைவதற்கு முன் கடைசி நொடியில் அவளுடைய பின் பக்கத்தில் அவனும் பதிலுக்கு பளார் என்று ஒரு அறை கொடுத்தான்.

கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் பின்பக்கத்தில் முரட்டுத் தனமாக அடித்து விட்ட அண்ணனை பார்த்து வாயை கோணி கொக்காணி காட்டிய பவித்ரா அடி விழுந்த தன் பின்புறத்தை தேய்த்து விட்டுக் கொண்டே தன்னுடைய அறைக்குள் நுழைந்து கட்டிலின் மேல் பாய்ந்து குப்புற படுத்து தலையணையை கட்டிப் பிடித்துக் கொண்டு கண்களை மூடிய படி இன்ப கனவுகளில் மூழ்கினாள். மனதுக்குள் அப்பாவும் அம்மாவும் சற்று நேரம் முன் பேசிக் கொண்டது ஓடியது.

என்னங்க… ஜோசியரை பார்த்து முகூர்த்தத்துக்கு நல்ல நாள் குறிச்சிட்டு வந்திட்டீங்களா? என்று தன் கணவனை பார்த்து கல்பனா ஆர்வமாக கேட்டாள். குறிச்சாச்சுடி.. ஜோசியர் மூணு நல்ல நாள் பார்த்து சொல்லிருக்காரு. ஜோசியரையும் இன்னைக்கு வர சொல்லிருக்கேன். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்ததும் அவங்க கூட கலந்து பேசிட்டு வசதியான ஒரு நாளை செலக்ட் பண்ணி பிக்ஸ் பண்ணிட வேண்டியது தான் என்று பதிலளித்தார் சந்திரன்.

[b]கல்பனா (பவித்ராவின் தாய்)[/b]

கல்பனா கொஞ்சம் வெட்கமாக தலை குனிந்து புன்னகைத்துக் கொண்டு, ரொம்ப தள்ளி போட வேண்டாம். பக்கத்திலே இருக்க ஒரு நாளை பிக்ஸ் பண்ணிடுங்க. ரெண்டும் கொஞ்சம் ஓவராவே கொஞ்சுதுங்க. சின்ன சிறுசுங்க. நாம பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்குள்ளே எதாவது ஏடா கூடமா செஞ்சுட போகுதுங்க என்று முணுமுணுத்தாள்.

சந்திரன், என்னடி சொல்றே… ரெண்டு பேரும் எப்போ பார்த்தாங்க. கல்யாண பேச்சு ஆரம்பிச்சதிலே இருந்து பவி வீட்டை விட்டு அதிகம் வெளியே கூட போகலையே என்று ஆச்சரியமாக கேட்க, வெளியே போனா தானா? எல்லாம் போன்லேயே நடக்குது. ஒரு நாள் அவ ரூமுக்கு போனப்ப அவ மாப்பிள்ளை கூட பேசிட்டிருந்ததை கேட்டுட்டேன். அப்பப்பா… என் காதே கூசிடுச்சு. என் பொண்ணா இதுன்னு தோணுச்சு. அவ்ளோ மோசமா மாப்பிள்ளை கூட போன்லே கொஞ்சிட்டிருந்தா… என்றாள் கல்பனா வெட்கம் விலகாமல்.

சந்திரன் சிரித்து, அவ்ளோ தானா? நான் கூட என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன். நீ இன்னும் பழைய பட்டிக்காடு தாண்டி. இப்பெல்லாம் இளசுங்க மத்திலே இது ரொம்ப ரொம்ப சாதாரண விசயம். யாருன்னே தெரியாதவங்க கூட எல்லாம் இந்த மாதிரி போன்லே பேசுற காலம் இது. நம்ம பவி அப்படிப்பட்ட பொண்ணு இல்லை. அவளுக்குன்னு நாம பார்த்த மாப்பிள்ளை கூட தானே பேசுறா. அதுவும் போன்லே தானே பேசுறாங்க. பேசிட்டு போகட்டும் விடுடி. நீ கண்டுக்காத என்றார்.

ஐயோ அவங்க பேசுறதை கேட்டா நீங்க இப்படி சொல்ல மாட்டீங்க. மாப்பிள்ளையும் எதேதோ பேசி இவளை நல்லா ஏத்தி விடுவாரு போல இருக்கு. இவ அவர் கூட போன்லே பேசிட்டே படுக்கைலே உருளுறதை பார்த்தா எங்கே சமயம் கிடைச்சா வெளியே போயி அவர் கூட… எதாவது தப்பு பண்ணிடுவாளோன்னு தோணுது. என் பொண்ணு இப்படி எல்லாம் பேசுவான்னு நான் நினைச்சுக் கூட பார்க்கலைங்க.

நீ சொல்றதை கேட்டா… பவி மாப்பிள்ளை கூட போன்லே பேசுறதை கேட்டு அவ மூடாகுறதை விட நீ தான் ரொம்ப மூடாகிட்ட மாதிரி தோணுது.

சொல்லிக் கொண்டே சந்திரன் கல்பனாவை நெருங்கி அவளை அணைக்க முயல…

கல்பனா, ச்சீ… தள்ளிப் போங்க… பொண்ணுக்கு கல்யாணம் பண்ண போறோம். பையன் அடுத்து காத்திட்டிருக்கான். இப்ப இந்த அரைக் கிழத்துக்கு பட்டப் பகல்லே அதுவும் காலங்காத்தாலே ரொமான்ஸ் கேட்குதோ என்று கணவனை செல்லமாக மார்பில் அடித்து சிணுங்கினாலும், கணவனின் கைகள் தன் உடலை சுற்றி வளைத்த போது அவள் அவருக்கு கட்டுப்பட்டு அவர் அணைப்புக்குள் அடங்கினாள்.