நண்பனின் X Like

அதன் பின் அவன் போன பின்பும் இவன் வருத்ததோடு இருந்தான் . அப்புறம் அவன் வேலையை ஒரு எரிச்சலோடு பார்த்தான் .ஒரு 3 மணியை போல விக்கிக்கு டேவிட் போன் செய்தான் .
எடுப்புமோ வேணாமா என்று யோசித்து சிறிது நேரம் ரிங் அடிக்க விட்டு எடுத்தான்
ஹே புது மாப்பிள எப்படி இருக்க என்றான் விக்கி .ம்ம் பரவல டா விக்கி ரெஜினா (டேவிட்டின் மனைவி ) ஓரளவு என் டேஸ்ட்க்குத்தான் இருக்கா ஓரளவு சந்தோசமா போகுது .அப்பா அம்மாவுக்கும் சந்தோசம் அதனால நல்ல இருக்கு என்றான் டேவிட் .
சரிடா நீ சந்தோசமா இருந்தா போதும்டா அப்புறம் என்ன மும்பை எப்ப வர என்றான் .already வந்து என் அப்பர்ட்மெண்ட்ல நானும் ரெஜினாவும் இருக்கோம் .வந்ததும் மணிக்கும் வள்ளிக்கும் கூட போன் பண்ணல உனக்குத்தான் போன் பண்ணிருக்கேன் by the way நான் சொல்ல வந்த விசயத்தையே மறந்துட்டேன் .
இன்னைக்கு இவினிங் நம்ம குரூப்க்கு மட்டும் ஒரு சின்ன பார்டி அரேஞ் பண்ணிருக்கேன் ,
என் பிரண்ட்ஸ் குரூப்ல நீ மணி அப்புறம் வள்ளி அவளவுதான் அப்புறம் ரெஜினா பிரண்ட்ஸ் ஒரு அஞ்சு பேர் வருவாங்க அதனால மறக்காம சாய்ங்காலம் 6 மணிக்கு என் அப்பர்ட்மெண்ட்க்கு வந்துடு .என்றான் .
சரி டா என்றான் விக்னேஷ் .டேய் அப்புறம் ரெஜினா பிரண்ட்ஸ் எல்லாம் லேடிஸ் அதனால நீ சந்தோசமா வா எத ஆச்சும் சிக்கும் நீ சந்தோசமா இரு என்று சொல்லி சிரித்தான் .
அவன் போனை வைத்ததும் இவன் மேஜையில் இருந்த பொருள்கள் அனைத்தையும் கோபத்தில் தட்டி விட்டான் .சே இவளவு அன்பா நம்மகிட்ட இருக்கானே இவனுக்கு போயி ஏன் தொரகம் பண்ணோம் என்று மேசையில் அடித்து கொண்டும் சுவற்றில் முட்டி கொண்டும் தன் கோபத்தை வெளிப்படுதினான் .
எப்படி அவன் முஞ்சில முழிக்கறது இப்ப நான் என்ன பண்ணுவேன் என்று அழுகாத குறையாக புலம்பினான் .அப்போது தான் அவனுக்கு யோசனை தோன்றியது மணியின் மனைவி வள்ளிகிட்ட இத பத்தி பேசுனா அவ எதுக்குனாளும் நல்ல யோசனை சொல்லுவா என்று எண்ணினான் .

முன்பே சொன்னது போல் வள்ளி விக்கிக்கு அவன் அக்காவை ஞாபக படுத்துவதால் எப்போது அவனுக்கு பிரச்சினை இருந்தாலும் அவளிடிம் யோசனை கேப்பான் .
அதன் பின் மணியிடம் சென்றான் .மணி சிஸ்டர் ப்ரீயா இருக்காங்களா எனக் கேட்டான் .ஏன்டா என்ன விஷயம்
இல்ல டேவிட் ஒரு சின்ன பார்ட்டி அரேஞ் பண்ணிருக்கான் இன்னைக்கு சாய்ங்காலம் நான் கல்யாணத்துக்கு வேற வரலையா அதனால ஒரு சின்ன கிப்ட் வாங்கணும் எனக்கு கிப்ட் பத்தி எதுவும் தெரியாது .அதான் வள்ளி கூட போயி கிப்ட் வாங்கிட்டு அப்புறம் வரலாம்ன்னு பாக்குறேன் என்றான் .
சுயர் அவகிட்ட போன் போட்டு கேட்டுட்டு போ என்றான் .ஒகே என்றான் .
அதன் பின் மாலை வள்ளியை பார்க்க அவள் வீட்டிற்கு சென்றான் .வாங்க ப்ரோ என்ன இந்த பக்கம் என்றாள் .அவனுக்கு உடனே சொல்ல முடியவில்லை சுவாதி விசயத்தை .
டேவிட்க்கு கிப்ட் வாங்கணும் செலக்ட் பண்ண வறியா என்றான் .ஓகே டா நான் பிரெஸ் ஆப் ஆகிட்டு வரேன் என்று போனாள்
வள்ளி நான் ஒரு தப்பு பண்ணிட்டேன் என்றான் ,அததான் நீ வார வாரம் பண்றியே என்று சொல்லி சிரித்தாள்
விளையாடாத வள்ளி இப்ப நான் சொல்ற விஷயம் ரொம்ப சீரியஸ் யார்கிட்டயும் சொல்ல கூடாது .ஏன் மணி கிட்ட கூட சொல்லக் கூடாது .என்றான் ,
ஐயோ ரகசியத்த என்னால பாதுகாக்க முடியாதே என்றாள் .ப்ளிஸ் நான் ஏன் பிரச்சினைய கேட்டு அதுல இருந்து விடுபட ஒரு வழி சொல்லு என்றான் .
சரி சொல்லு என்றாள் வள்ளி .யார் கிட்டயும் சொல்ல கூடாது என்றான் ,அவள் சொல்ல மாட்டேன் சொல்லு என்றாள் அவன் மறுபடியும் யார் கிட்டயும் சொல்ல கூடாது என்றான் ,அவள் கடுப்பாகி சொல்ல மாட்டேன் சொல்றா என்றாள் .
விக்கி தைரியத்தை வர வைத்து கொண்டு சொன்னான் நான் சுவாதி கூட செக்ஸ் வச்சுகிட்டேன் என்றான் .
என்னது நம்ம டேவிட்டோட எக்ஸ் லவர் கூடயா என அதிரிச்சியோடு கேட்டாள் .
ஆமா என்றான்.ஏன் டா எப்படி டா என்றாள் .ரெண்டு பெரும் போதையில இருந்தோம் என்ன பன்றோம்ன்னு எங்களுக்கே தெரியல .ஆனா இப்ப எனக்கு வருத்தமா இருக்கு என்று தலையில் கை வைத்து குனிந்து வருத்தப்பட்டான் .

வள்ளியும் அமைதியாக இருந்தாள் .விக்கி எழுந்து கேட்டான் என்ன பேசாம இருக்க என்னையே பாத்தா ஏதும் கேட்டவன் மாதிரி தோணுதா என்றான் .

அவள் அப்படி இல்லைடா என்றாள்.அப்படின்னா ஏன் பிரச்சினைக்கு வழி சொல்லு என்றான் .என்ன உன் பிரச்சினை எதுக்கு நீ பீல் பண்றே என்றாள் .

என்ன பிரச்சினையா நான் சுவாதி கூட செக்ஸ் வச்சுகிட்டேன் என்றான் .அதுல என்ன பிரச்சினை அவ விருப்பத்தோடுதானே வச்ச அவ விருப்பம் இல்லாம அவள கற்பளிக்கவா செஞ்ச என்றாள் .

அவ விருப்பத்தோடு தான் வச்சேன் .ஆனா என்று இழுத்தான் .ஆனா என்னடா என்றாள் .அவ என் பிரண்டோட எக்ஸ் லவர் நான் என் பிரண்டுக்கு தொரகம் பண்ணிட்டேன் அத என்னால தாங்கிக்கிற முடியல என்றான் .

நீ சொன்னதெல உன் பிரச்சினைக்கு வழி இருக்கு என்றாள் வள்ளி .என்னது அது என்றான் .அவ உன் பிரண்டோட எக்ஸ் லவர் அவ இப்ப பிரண்டோட லவராவோ பொண்டாட்டியவொ இருந்து இருந்தா நானே உன்ன செருப்பால அடிச்சு இருப்பேன் .

அது மட்டும் இல்லாம சுவாதியும் பாவம்தான் அவளுக்கு இந்த சமயத்தில இப்படி ஒரு டைவேர்சென் வந்தது நல்லதுதான் .அதனால உன் மேல எந்த தப்பும் இல்ல என்றாள் .

ஐயோ அப்படி இல்ல டேவிட் இன்னும் ஸ்வாதியே லவ் பண்ணிகிட்டுதான் இருக்கான் .அதான் கல்யாணத்துக்கு முன்னாடி அவள நினச்சு தண்ணிய போட்டு அழுதுருக்கான் .நான் அவனுக்கு தொரகம் பண்ணிட்டேன் என்றான் விக்கி .

அவள இன்னும் லவ் பண்ணிக்கிட்டு இருந்தா கல்யாணத்த நிப்பாட்டிட்டு வந்து இவள கல்யாணம் முடிச்சு இருக்கலாம்ல .

இத்தனைக்கும் கிறிஸ்டின் மேரேஜ் இசியா சர்ச்ல வச்சு எல்லார் முன்னாடியும் இந்த கல்யாணம் பிடிக்கலன்னு சொன்னா அவன விட்ருப்பாங்க அத பண்ணல அவன் ,அப்புறம் என்ன இன்னும் லவ் பண்றனாம் என்றாள் கோபத்தோடு .

இருந்தாலும் என்று அவன் இழுக்கவும் என்ன இருந்தாலும் என்னையே பொருத்தவரைக்கும் நீ செஞ்சது தப்பு இல்ல .சொல்ல போனா டேவிட் விட நீதான் சுவாதிக்கு காரேக்ட்டா மேட்ச் ஆகுற உங்க ரெண்டு பேர் ஜோடி பொருத்தமும் நல்ல இருக்கு என்றாள் .

உடனே அவன் ஹலோ சிஸ் நாங்க லவ் எல்லாம் பண்ணல சும்மா ஏதோ நடந்து போச்சு அவளவுதான் என்றான் .

அதானே உனக்கு எங்க லவ் எல்லாம் வர போகுது .ஆனா சுவாதிதான் உனக்கு காரேக்ட் ஆன ஜோடி என்றாள் .சரி சரி அத விடு இப்ப எனக்கு இருக்க குற்ற உணர்ச்சிய போக்க வழி சொல்லு என்றான் .

இதுல ஒரு குற்றமும் இல்ல ,இருந்தாலும் உனக்கு ஒரு வழி சொல்றேன் என்றாள் .ம்ம் சொல்லு சொல்லு என்றான் ஆர்வமாக ,

என்கிட்ட சொன்ன மாதிரி டேவிட்கிட்ட சொல்லிடு என்றாள் .என்ன சொல்ற நீ லூசா ஆகிட்டியா என்றான் .அது இல்லடா இது நம்ம யாருக்கு தப்பு பண்ணமோ அவங்க கிட்டேயே மன்னிப்பு கேட்டாதான் நல்லா இருக்கும் என்றாள் .

உடனே அவன் இன்னைக்கே நான் அவன்கிட்ட சொல்லிடுவா என்றான் .அவசரப் படாதடா ஒரு வாரம் கழிச்சு சொல்லு இன்னைக்குத்தான வந்து இருக்கான் .ரொம்ப தேங்க்ஸ் வள்ளி என்றான் .’

சரி வா இப்ப கிப்ட் வாங்க போவோம் என்று இருவரும் கிளம்பினார்கள்

அதன் பின் விக்கி வள்ளி கூட போயி டேவிட்டுக்கு கிப்ட் வாங்கிட்டு சாயங்கலாம் அவன் வீட்டுக்கு போனான் .அவனை நேருக்குநேர் பார்க்க அவனுக்கு கஷ்டமாக இருந்தது .ஆனால் அவன் இவனை பார்த்ததும் நட்போடு கட்டி பிடித்து அவனை வரேவேற்றான் .

ஏண்டா நீ கல்யாணத்துக்கு வரல ,வந்து இருந்தினா நீதான் என் பெஸ்ட் மென் மணி இல்ல என்றான் .உடனே மணி டேவிட்யை பார்த்து முறைத்தான் கோவிச்சுக்காத மணி என்னதான்
நீ என் சின்ன வயசுல இருந்து பிரண்டா இருந்தாலும் நீ பாட்டுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு பொண்டாட்டியே கதின்னு என்னையே தனியா விட்டுட்டு போயிட்ட என் பேச்சலர் லைப் என்ஜாய் பண்ண விக்கிதான் ஹெல்ப் பண்ணான் அவன்தான் எனக்கு நிறைய பிரபலத்த சல்வ் பண்ணி கொடுத்து இருக்கான் .நானும் அவனும் நல்ல என்ஜாய் பண்ணிருக்கோம் லைப்ப என்றான் .
மணி சிரித்து கொண்டே ஆனா இனிமேல் உன்னால என்ஜாய் பண்ண முடியாதே நீதான் என்னையே மாதிரியே கல்யாணம் பண்ணிட்டியே என்றான் .
அதனால என்ன இப்ப என்னால இப்பயும் என் பெஸ்ட் பிரண்ட் கூட என்ஜாய் பண்ணதான் செய்வேன் .என்ன விக்கி இந்த வாரம் பப்க்கு போவோமா இல்ல கிளபுக்கு போவோமா என்ஜாய் பண்ண என்று சொல்லி சிரித்தான் .விக்கி அவன் பேசியதற்கு ஒன்றும் சொல்லமால்ஏதோ சிரிக்க வேண்டும் என்பதற்காக சிரித்தான் .
டேய் டேவிட் பப்போ கிளப்போ எங்க போனாலும் போறதுக்கு முன்னாடி அங்க ஒரு ஆள் வருது அவங்க கிட்ட அனுமதி வாங்கிட்டு போ என்று சொல்லி சிரித்தான் மணி .அப்போது உள்ளே இருந்து அவன் மனைவி வந்தாள் .சரி சரி கம்முனு இருங்கடா என்றான் .
பாருடா என்னையே பொண்டாட்டி தாசன்னு சொல்லிட்டு இவன் கல்யாணம் ஆகி ஒரு வாரம் கூட ஆகல அதுக்குள்ளே பொண்டாட்டிக்கு பயந்து நடுங்குறான் என்று சொல்லி சிரித்தான் மணி .அதன் பின் டேவிட் மனைவி வந்ததும் என்ன எல்லாரும் சிரிக்கிறிங்க யாரு இவரு என்றாள் .
டேவிட் விக்கியின் தோள்களில் கை போட்டு கொண்டு இவன்தான் விக்னேஷ் அலைஸ் விக்கி மணிக்கு அப்புறம் என் பெஸ்ட் பிரண்ட்இவன்தான் ,மணி எனக்கு மச்சான் மாதிரினா இவன் எனக்கு ட்வின் பிரதர் மாதிரி என்று சொல்லி அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் .
சொல்லிருகிங்க இவர பத்தி நிறைய என்கிட்ட என்றாள் .விக்கி அவளை பார்த்து வெறும் ஹலோ மட்டும் சொல்லிவிட்டு உள்ளே சென்றான் .
அதன் பின் விக்கி டேவிட்டை தவிர்த்து விட்டு வேண்டும் என்றே அங்கு வந்து இருந்த வேறு ஒரு பெண்ணிடம் சும்மா பேசி கொண்டு இருந்தான் .டேவிட்டும் சரி வந்ததும் வேலையா ஆரம்பிச்சுட்டான் என்று அவனை கண்டு கொள்ளவில்லை
ஆனால் விக்கி டேவிட் அந்த பக்கம் போனதும் அந்த பெண்ணிடிம் சாரி எனக்கு தலை வலிக்குது நான் போயி அங்குட்டு தனியா உக்காந்துகிறேன் என்று சொல்லி அவன் தனியாக சோபாவில் உக்காந்தான் .
சே இந்த டேவிட் பயலாயும் அந்த சுவாதி சிறுக்கியாளையும் எவ கூடயும் பேச கூட முடியல என்று வருத்தப்பட்டு கொண்டே லேசாக கண்ணை மூடினான்
திடிரென பலமான சிரிப்பு சத்தம் கேக்கவும் விக்கி திடிக்கிட்டு எழுந்தான் .சத்தம் வந்த பக்கம் பார்த்தான் அங்கு ஒரு சோபாவில் டேவிட் அவன் மனைவி மணி அவன் மனைவி எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்து கொண்டு இருந்தனர் .டேவிட் சிரித்து கொண்டே விக்கி இங்க வாடா உன்ன பத்தி பேசித்தான் சிரிச்சு கிட்டு இருக்கோம் என்றான் .
என்னையே பத்தி என்னடா பேசுறிங்க என்று மனதில் நினைத்து கொண்டு சென்றான் .என்ன டேவிட் என்றான் .டேய் உன்ன பத்திதான் பேசிகிட்டு இருக்கோம்.என்னையே பத்தி என்ன என்று புரியாமல் கேட்டான் விக்கி .
நீ என்னோட பழைய பொருள் ஒன்ன போட்டத பத்தி பேசிக்கிட்டு இருக்கோம் என்று அவன் சொன்னவுடன் எல்லாரும் சிரித்தார்கள் .விக்கிக்கு பக் என்று இருந்தது என்னடா இவன் ஏதோ தெரிஞ்ச மாதிரி டபுள் மீனிங்கல பேசுறான் என்று நினைத்தான் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *