எப்ப பார்த்தாலும் தெருவுலே உட்கார்ந்துகிட்டு எல்லாத்திடமும் சண்டை இழுத்திட்டு ருக்குமே இன்னிக்கி எங்க ஆளையே கானோம். செத்துக்கித்து போச்சா என யோசித்துக்கொண்டே வந்த நேரம் பார்வதி பாட்டி வீட்டிலிருந்து வெளியே வந்தாள். வாவே பட்டனத்து பாப்பிள்ளை, படிப்பெல்லாம் முடிஞ்சா, சோலி கீலி ஏதாவது கிடைக்கா. என வினவினாள். இப்பத்தான் ஆத்தா பரிட்சை முடிஞ்சிருக்கு முடிவெல்லாம் வந்தபின்னாலத்தான் சோலி நோக்கனும் என பதிழலித்தான். என்னமோ போவே சட்டுபுட்டுன்னு சம்பாரிச்சு சீக்கிறாம் உங்க ஐயாவுக்கு ரெஸ்ட் குடுவே, வீட்டுக்கு போ உங்க ஐயாருக்கு ஒடம்பு நோவுனு சொன்னான், என்னன்னு பாருலே என சலிப்போடு சொன்னாள் பார்வதி பாட்டி. தன் அப்பாவிற்கு உடம்பு சுகமில்லை என்றதும் அவன் மனதில் இருந்த கிறக்கம் போய் அப்பாவைப்பற்றிய கவலை அதிகமானது. வேகவேகமாக வீட்டை நோக்கி நடந்தான். மாறன் வீட்டை அடைந்ததும் அம்மா குப்பாயிதான் இருந்தாள். இவன் வருகையை பார்த்ததும் மிக மகிழ்ச்சி அடைந்தவளாக வாய்யா மாறா ஒடம்புல்லாம் சௌகரியமா இருக்கா, பரிட்சை நல்லா எழுதியிருக்கியாயா ? என வினவினாள். எனக்கென்னம்மா நான் நல்லாத்தான் இருக்கேன், அப்பாருக்கு என்னமோ நோவுனு பார்வதி கிழவி சொல்லுச்சே, அப்பாரு எங்கே ? என கலக்கத்துடன் கேட்டான். அப்பாருக்கு ஒன்னுமில்ல, சும்மா தலைவலின்னு உள்ளாரா படுத்திருக்காங்க நீ போய் கை கால் அழம்பிட்டுவந்து சாப்பிடு என பாசத்துடன் கூப்பிட்டாள். நான் வரும்வழியிலே சாப்பிட்டேன், எனக்காக எதையும் செய்ய வேண்டாம். நான் பாத்ரூம் போய்ட்டுவரேன். எங்கே சங்கீதா வீட்டில் இல்லையா என தங்கையின் மேல் உள்ள பாசத்தினால் கேட்டான். எப்போவும் எலியும் பூனையா இருப்பீங்க இப்ப என்ன தங்கச்சி மேல பாசம் வந்துச்சோ என கிண்டலாக கேட்டாள் குப்பாயி. அவன் சிரித்துக்கொண்டே பாத்ரும் சென்றான். அவனுக்கு தானே தெரியும் அவர்கள் எவ்வாறு இணைந்தார்கள் என்பது. சிரித்துக்கொண்டே பாத்ரூமிற்கு குளிக்க சென்றான்.
Next episode quick bro
admin please upload manichudunga ram balance story..
அழகு.. தொடரட்டும்…
Super thodarattum