மோகன் சிரிச்சார்.
அவர் சிரிக்கிறதை பார்த்து, ரூபா பழிப்பு காட்டி, போதுமா னு சொல்ல
மோகன் தலையை ஆடினார்.
நான்சி சிரிச்சிகிட்டே போய்ட்டா.
அங்கு வந்த சசி, என்ன ரூபா கூப்பிட்டனு கேட்க
ஏன்டா அறிவு கெட்டவனே, அவளை ரூபானு பேர் சொல்லி கூப்பிடுற,
அவளுக்கு சோறு போட உனக்கு முடியல,
நீ எப்படி அவளை பேர் சொல்லி கூப்பிடலாம்,
ஒழுங்கா மரியாதை கொடுத்து பேசணும், மோகன் சொல்ல
சரிங்க அண்ணா, சசி சொன்னார்.
ரூபா சசியை பார்க்க
எதுக்கு கூப்பிட்டீங்க, ரூபாவை பார்த்து சசி கேட்க
அவங்க கூப்பிட்டாங்க, மோகனை பார்த்து ரூபா சொல்லிட்டு அங்கிருந்து போய்ட்டா.
சிறிது நேரம் அண்ணனும் தம்பியும் ஏதோ பேசிட்டிட்டாங்க.
மறுநாள் மோகனின் உத்தரவுப்படி சசி வேலை விஷயமா ஊருக்கு கிளம்பினார்.
ஒரு வாரம் கடின உழைப்பிற்கு பிறகு வீட்டிற்கு வந்தார் சசி.
ஒரு வாரத்தில், அந்த வீட்டில் நிறைய மாற்றங்கள்,
சசிக்கு அந்த வீட்டில் உணவும் தங்குவதற்கும் உரிமை இருந்தது.
அதை தவிர சசிக்கு எந்த உரிமையும் இல்லை.
ரூபா அவனிடம் பேசுவதை தவிர்த்தாள்.
நான்சியும் அப்படித்தான்.
சசி தன் நிலைமையை நினைத்து நொந்து போனார்.
வேறு வழி இல்லை.
அண்ணன் வரவில்லை என்றால், தன்னுடைய நிலைமை என்ன ஆகியிருக்கும்.
குடும்பத்தின் நிலைமை என்ன ஆகியிருக்கும்.
நினைத்தே பார்க்க முடியாது.
இன்னைக்கு ரூபாவும் நான்சியும் சிரிக்கிறார்கள் என்றால் அது
அண்ணனால் மட்டும்தான்.
கம்பெனி மட்டும் இல்லாமல் குடும்பத்தையும் பொறுப்புடன் நடத்திக்கொண்டு
இருக்கிறார்.
அந்த உரிமையில் தான் ரூபாவை வாடி போடி னு கூப்பிடுகிறார்.
இப்படி நினைத்த சசி, தன் மனதை தேற்றி கொண்டார்.
தன்னுடைய குடும்பம் சந்தோசமாக இருப்பதை பார்த்து தானும்

Podurathu 7 page athum 50line kuda illa sikaram next part podu or stop paniko thala
Podurathu 7 page athum 50line kuda illa sikaram next part podu or stop paniko thala…