இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 4 90

“கிஷோர் எனக்கு என்ன சொல்றது ன்னு தெரியல. நான் உன் வாழ்க்கைக்கு எவ்ளோ முக்கியம் நீ தெளிவா எனக்கு புரிய வச்சுட்ட. சொல்லப்போனா எனக்கும் உன்னை ரொம்ப புடிச்சி தான் இருக்கு. உன்னோட வெகுளி தானம், கள்ளம் கபடம் இல்லாத பேச்சு எல்லாம் எனக்கு பிடிச்சுருக்கு. ஆனா நீ எப்போவும் ஒரே மாதிரி இருப்பியா ன்னு தெரியல.. நீ மாறிடுவியோ ன்னு பயமா இருக்கு.. அதுனால என்னால எதுவும் பதில் சொல்ல முடியல”

“ஏன் கலை நான் ஏன் மாற போறேன். நீ வேணும் வேணும் ன்னு என்னோட ஒரு ஒரு அணுவும் துடிச்சுட்டு இருக்கு. கல்யாணத்துல இருந்து கல்லறை வரைக்கும் நீயும் நானும் ஒண்ணா பயணிக்கிற மாதிரி ஒரு ஒரு நொடியும் என் மனசுக்குள்ள காட்சி ஓடிட்டு இருக்கு கலை”

கலையின் கைகள் மெதுவாக காதலாக கிஷோரின் கையின் மேல் படிந்தது “ஆசை வார்த்தை பேசி என்னை மயக்காத டா, நான் விழுந்துருவேன். ஒரு சராசரி ஆம்பளை மாதிரி நீயும் என் உடம்பு மேல ஆசை பட்டு பழகுறதா இருந்தா இப்போவே சொல்லிடு, இன்னைக்கே ராத்திரியே கூட எடுத்துக்கோ. ஆனா என் மனசோட விளையாடாத”

அவள் இதழ்களில் விரலை வைத்து அவன் மனதை கிழிக்கும் கொடும் சொற்கள் மேலும் வராதவாறு அடைத்தான். அவள் கையை தன் உள்ளங்கைக்குள் வைத்து பூட்டினான்.

“இந்த ஒரு ஜென்மத்துக்கு மட்டும் நீ போதும் ன்னு நினைச்சி இருந்தா, நான் உன் உடம்பை கேட்டிருப்பேன். எத்தனை ஜென்மம் இருக்கோ அத்தனைக்கும் நீ எனக்கு வேணும், அதனால நான் உன் மனச கேக்குறேன் கலை, தருவியா எனக்கு”

கலைக்கு கண்களில் ஓரம் நீர்த்துளியும் இதழ்களின் ஓரம் ஆனந்தமும் எட்டி பார்த்தது. “போடா!!! அந்த மனசு தான் எனக்கே தெரியாம கொஞ்சம் கொஞ்சமா உன்கிட்ட போய்கிட்டு இருக்கு. கொஞ்சம் பொறுமையா இரு. கூடிய சீக்கிரம் முழுசா உன்கிட்ட இருக்கும்”

“ஆனா என் மனசு எப்போவோ உன்கிட்ட போயிருச்சு கலை”

“கிஷோர் நான் உன்கிட்ட சில விஷயங்கள் சொல்லணும், சில விஷயங்கள் கேக்கணும்”

“என்ன?? என்ன?? சொல்லு”

1 Comment

  1. Why part are uploading to late…make it soon and upload as much possible when the day starts.

Comments are closed.