இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 4 90

ஆஆஆ என பெரிய கொட்டாவி விட்ட கலை “டேய் லூசு கிஷோர், நான் நம்ம ஃபியூச்சர் பிளான் கேக்கல.. உன்னோட ஆசைகள் கேட்டேன், சின்ன சின்ன ஆசைகள் (மார்பகம் தெரியுமாறு துப்பட்டாவை சற்று மேலே தூக்கிவிட்டு, கிறங்கிய கண்களுடன், மேல் கீழ் உதடுகளை நாக்கால் ஈரப்படுத்திக் கொண்டே) அதாவது கைக்கு எட்டுன தூரத்துல உடனே நிறைவேத்துற மாதிரி தற்காலிக ஆசைகள்”

ஓ அதுவா, இப்போ எனக்கு உன்கூட

(ஆர்வமாக) என்கூட

உன்கூட சேர்ந்து கடல்ல குதிச்சு விளையாட ஆசையா இருக்கு, ஆனா போலீஸ் இருக்காங்களே!! என்ன பண்றது??

நீ சரியான அம்மாஞ்சி பையன்னு தெரிஞ்சும் உன்கிட்ட கேட்டேன் பாரு, என்னை சொல்லணும், சரி எனக்கு என்ன ஆசைன்னு இருக்கு ன்னு கேக்க மாட்டியா?

கலை அவனை அம்மாஞ்சி என்று சொன்னதன் காரணம் புரியாமல் பாவமான முகத்துடன், சரி உனக்கு என்ன ஆசை (சற்று இடைவெளி விட்டு தயங்கி) டி..

எனக்கு உன்கிட்ட இருந்து முத்தம் வேணும்..

இங்க எல்லாரும் இருக்காங்களே கலை, இல்ல இல்ல கலை இல்ல, இங்க எல்லாரும் இருக்காங்களே டி..

இங்க கொஞ்ச நேரம் முன்னாடி, முகுந்த் என்னை என்ன பண்ணான் ன்னு நியாபகம் இருக்கா? பக்கத்துல உக்காந்து பாத்துட்டு தான இருந்த கிஷோர், அப்போவும் இதே கூட்டம் தான இருந்துச்சு. கிஸ் கேட்டா ஒழுங்கா குடு, ஓவரா நெளிஞ்சுட்டு இருக்காத. ரொம்பவும் கூச்சமா இருந்துச்சுன்னா நாலு பக்கமும் கொஞ்சம் திரும்பி பாரு எல்லாரும் என்ன பண்றாங்கண்ணு, நாம மட்டும் தான் டா பேசிட்டு இருக்கோம்..

சரி நீ கண்ணை மூடிக்கோ, நான் தரேன்.

கலை கண்களை மூடிக் கொண்டாள். தன் மீதமுள்ள வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளப் போகும் தன் மனம் விரும்பிய காதலனிடம் இருந்து பெறப் போகும் முதல் முத்தத்தை எண்ணி பூரிப்பால் அவள் உதடுகள் புன்னகைத்து விரிந்தது. கண்களை மூடி காத்திருந்தாள்.

தன் வாழ்நாளிலேயே முதன் முதலாக ஒரு பெண்ணை இதழ்களால் தீண்ட போவதை எண்ணி கிஷோரின் உடல் முழுவதும் பதட்ட உணர்வு பரவி கொண்டிருக்க, அவன் இருதயம் துடிக்கும் சப்தத்தின் ஒலி அளவு அதிகரித்து அவன் காதால் தெளிவாய் கேட்க முடிந்தது. ஸ்டெதாஸ்கோப் இல்லாமலே அவன் இதயத் துடிப்பை எளிதாக கண்டறிந்து விட்டிருக்கலாம்.

மெதுவாக அவளை நெருங்கி கொண்டிருந்தான். அவன் இதழ் அவளை தீண்டுவதற்கு முன்பாக, அவளுடைய உடலின் நறுமணம் அவன் நாசியை தீண்டியது. இது தான் பெண் வாசனையோ, இதை தான் சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு, கண்டதுண்டா? கண்டவர்கள் சொன்னதுண்டா? என்று பாடினார்களா? அங்கு தான் அந்த பாடல் எழுத்தாளர் பிழை செய்திருக்கிறார். சேலை மட்டுமல்ல, ஆடை ஏதுவாயிருப்பினும் அவர்களின் நறுமண வாடை ஒன்று தான். இவ்வாறெல்லாம் கிஷோரின் மனது கலையின் வாசத்தை ஸ்ரீகரிக்க, அவன் இதழ்கள் ஒரு வழியாக அவளை வந்தடைந்தது. அவன் கொடுத்த முத்தம் “ப்ப்ப்ச்ச்ச்” என்ற சத்தம் எழுப்ப.

கலை கண்களை திறந்தாள். என்னது இது??

முத்தம் கொடுத்தேன் டி.

குழந்தை பையனா டா நீ. கன்னத்து ல முத்தம் கொடுக்குற. என் உதட்டுல கொடு கிஷோர்.

சொல்லிவிட்டு கலை கண்களை மூடிக்கொள்ள, இம்முறை கிஷோர் அவள் கன்னங்களை இரு கைகளாலும் பிடித்து கண்களை இருக்க மூடிக் கொண்டு அவளை நெருங்கினான். அவன் இதழ்களை அவள் இதழில் பொருத்தினான். அவன் இருதயத் துடிப்பின் வேகம் இரு மடங்காக அதிகரித்து இருக்க, அவன் உடலின் ரோமங்கள் அனைத்தும் மயிர்க் கூச்செறிந்து நட்டுக் கொண்டு நின்றது. அவ்வளவு தான் கலை கேட்ட முத்தத்தை கொடுத்தாச்சு என்று இதழை எடுக்க..

1 Comment

  1. Why part are uploading to late…make it soon and upload as much possible when the day starts.

Comments are closed.