“ஒரு ஆம்பளை கை பட்டு நான் கிறங்கி போனதுன்னா அது முகுந்த் கிட்ட தான் டா. அவனும் நானும் செக்ஸ் வச்சுக்கல, ஆனா அதை தவிர எங்களுக்குள்ள எல்லாம் நடந்துருச்சு டா. என் உடம்பு ல அவன் உதடு படாத இடம் இருக்குதா ன்னு கேட்டா எவ்ளோ ஆழமா நான் யோசிச்சாலும் என்கிட்டே இருந்து இல்ல ன்னு தான் பதில் வரும். ஆனா செக்ஸ் மட்டும் நாங்க வச்சுக்கல, கல்யாணத்துக்கு அப்புறம் பாத்துக்கலாம் ன்னு விட்டோம், அது அப்டியே விட்டுப்போச்சு”
போதுமா சார், இல்ல இன்னும் ஏதாச்சும் சந்தேகம் இருக்கா??
“ஒன்னு மட்டும் கலை, என் உடம்பு எங்க போனாலும் என் மனசு உன்கிட்ட தான் இருக்கும் ன்னு ஏன் சொன்ன, அதனால தான் நீ ஆல்ரெடி நெறய பேரு கூட” அவசர பட்டு நெறய பேரு ன்னு சொன்னதை நினைத்து நாக்கை கடித்து கொண்டான்.
“ம்ம்ம் தெரியுது.. நெறய பேரு கூட படுத்துருப்பேன் ன்னு நினைச்சியா? ஓப்பனாவே கேளுடா முதல்ல எதுவா இருந்தாலும் அங்கேயே அப்போவே போட்டு உடைச்சிறணும் டா, நீயா இருந்தாலும் நானா இருந்தாலும், மனசுக்குள்ளேயே பூட்டி வச்சு, அது பின்னாடி நமக்குள்ள பெரிய சண்டை வந்தா அது என்னால தாங்கிக்க முடியாது டா” அவள் முகத்தில் சின்ன வருத்தம் குடி புகுந்தது.
“கலை அப்புடி ஒரு நிலைமை வந்தா அது உனக்கு மட்டுமில்ல எனக்கு கஷ்டம் தான், எதுவா இருந்தாலும் அப்போவே கேட்குறேன். சாரி இப்டி சொல்றதுக்கு, நீ அஞ்சு இல்ல ஆறு பேரு கூட செக்ஸ் வச்சிருந்துருப்ப ன்னு நினச்சேன்”
“நான் செக்ஸ் அடிக்ட் இல்லடா, உடல் தேவைகளை அடக்க முடியாம கிடைக்குற ஆம்பளைங்க கூட பண்றவ நான் இல்ல. நான் ஒரு அது எப்படி சொல்றது, ம்ம்ம்ம்……. இன்னொருத்தன் கிட்ட நான் போக வேண்டிய கட்டாயம் வரும் போது, வேற வழியே இல்லன்னு தள்ளப்படும் போது, அய்யயோ என் கற்பு போய்டுமே ன்னு அழுது புலம்பாம, நான் என் உடம்ப எடுத்துக்க சொல்லிடுவேன். அவ்ளோதான், இதுவரைக்கும் அந்த மாதிரி எனக்கு ஒரு சிட்சுவேசன் வந்தது இல்ல. இனிமேல் வந்த வரலாம் ல, அதுக்காக தான் நான் அப்டி சொன்னேன் டா. அப்போ சொன்னதை விட ரொம்ப ஸ்ட்ராங் ஆ சொல்றேன் டா, என் உடம்பு எங்க போனாலும் என் மனசு உன்கிட்ட தான் இருக்கும்”
Why part are uploading to late…make it soon and upload as much possible when the day starts.