” உங்களுக்குத்தான்..?”
” ரொம்ப நாள் முன்னயே இந்த விஷயம் எனக்கு தெரியும். அதனால அப்பருந்தே என் மனசை நான் இதுக்கு பக்குவப் படுத்திட்டேன்..”
” வருத்தமா இல்லையா.. ?”
” வருத்தம்தான்..! ஆனா.. என்ன பண்றது அதுக்கு..?” என்று புன்னகையுடன் திருப்பிக் கேட்டாள்.
பாக்யா கவலையுடன் சாந்தினியைப் பார்த்தாள். கிட்டதட்ட தனக்கும் அந்த மாதிரி வாழ்க்கைதான் என்று தோன்றியது. சாந்தினிக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தாள்.
” உங்களுக்கும் குழந்தை இல்லேனு கேள்விப் பட்டேன் ?” என்றாள் சாந்தினி.
தலையசைத்தாள் பாக்யா.
”ஆமா ”
” கல்யாணமாகி எத்தனை மாசம் ஆச்சு.”
” எட்டு மாசம் பக்கமிருக்கும்..”
” டாக்டரை பாத்திங்களா ?”
” இன்னும் இல்லை.”
” பாத்துருங்க. இப்பவே பாத்துட்டா.. நல்லது..”
” இல்ல.. இன்னும் வயசிருக்கேன்னுதான்..! ஆமா நீங்க டாக்டர பாத்திங்களா . ?”
” ம்ம்.. பாத்தேன்..! என் பக்கம்தான் பிரச்சினை..”
” என்ன பிரச்சினை.?”
” தைராய்டு பிராப்ளம்..! இங்க பாருங்க..” தொண்டைக்கு மேல் காட்டினாள் ”இது இருக்கில்ல.. கொஞ்சம் பொடைச்ச மாதிரி இருக்கில்ல..? இதான். இதனால கர்ப்பப் பைலயும் கட்டின்னாங்க. மாத்திரை சாப்பிட்டு இருக்கேன். ஜோசியம் பாத்ததுல அவங்களும் எனக்கு புத்திர பாக்கியம் இல்லேன்னுதான் சொன்னாங்க. நான் வயசுக்கு வந்த நேரம் சரியில்லையாம்..!” என்று நீளமான ஒரு கதையைச் சொன்னாள் சாந்தினி.
அவள் சொன்னதெல்லாம் கேட்டபோது.. பாக்யாவுக்கு மிகவும் பயமாக இருந்தது. கிட்டதட்ட தன்னையே சாந்தினியாக நினைத்துக் கொண்டாள். இதைப் பற்றி உடனே ராசுவிடம் பேசினால் ஏதாவது தெரியும் என்று தோன்றியது.
சாந்தினி கேட்டாள்.
”உங்களுது லவ் மேரேஜா ?”
” ம்ம்” மயிரு மேரேஜு என மனதுக்குள் நினைத்து சிரித்துக் கொண்டாள்.
” யாருக்கு லவ் ஜாஸ்தி..? உங்களுக்கா..?”
” அப்படி இல்ல..” எனச் சிரித்தாள்.
” யாரு லவ்வ மொதல்ல சொன்னது..?”
மெல்ல. ”அவன்தான் ”
” நெனச்சேன். இத்தனை அழகா.. ஃபிகரா நீங்க எப்படி அவன்கிட்ட போய் விழுந்திங்க. ?” எனச் சிரித்தபடி கேட்டாள் சாந்தினி.
சங்கோஜத்துடன் சிரித்தாள் பாக்யா. கொஞ்சம் நெளிந்தாள்.
சாந்தினி விடாமல் கேட்டாள்.
” சரி.. பரத் எப்படி ?”
” எப்படின்னா..?”
” உங்க மேல பயங்கர லவ்வா இருப்பானா. ?”
சிரித்தாள். அவள் இவ்வளவு ஒளிவு மறைவில்லாமலல பேசும்போது தான் மட்டும் ஏன் மறைக்க வேண்டுமென நினைத்தாள்.
” என் கதையும் கிட்டதட்ட உங்க கதை மாதிரிதான் ”
” என்ன? ”
” அவனுக்கும் ஒருத்தி இருக்கா.. கீப்.”
” யாரு ?”
சொல்லக் கஷ்டமாக இருந்தது. இருப்பினும் ”காளீஸ் ” என முனகினாள்.
” தெரியும் ” என்று உடனே சொன்னாள் சாந்தினி ”அவ ஒரு மாதிரி பொம்பள. இந்த ஊர்ல எனக்கு தெரிஞ்சு அவ பாதி ஆம்பளைககூட படுத்துருப்பா..! இது அவ புருஷனுக்கு தெரிஞ்சேதான் நடக்குது..”
” தெரிஞ்சேவா. ?”
” ஆமா.. ! ஏன் நீங்க கேள்விப் பட்டதில்லையா ?”
” ம்கூம்.. ”
” அந்த ஆளு.. ஒரு ஆம்பளைனே சொல்ல முடியாது. அப்படி ஒரு ரகம். ! அவனுக்கு சரக்கு வாங்கி குடுத்தா போதும்.. அவனே வீட்டுக்கு கூட்டிட்டு போயிருவான்..!”
சாந்தினி சொல்ல.. பாக்யாவின் முகம் சிறுத்தது. அப்படிப்பட்ட ஒருத்தியைப் போய்.. அனுபவித்து விட்டு வருபவனுடன் படுத்து கிடக்கிறோமே என்று அவளது சுய மரியாதை வருந்தியது. இது தெரியாமல் அவசரப் பட்டு இந்த வயதிலேயே கல்யாணம் வேறு பண்ணித் தொலைத்து விட்டோமே என்று கவலையாக இருந்தது.
சாந்தினி மெதுவாக எழுந்து வந்து பாக்யாவின் தோளில் கை வைத்தாள்.
” அவனை திருத்தாட்டி உங்க வாழ்க்கை சீரழிஞ்சிரும்..! தேவடியா வீட்டுக்கு போற ஆம்பளைகூட வாழறது எவ்வளவு பெரிய நரகம்னு எனக்கும் தெரியும்..” என்றபோது அவள் கண்கள் கலங்கியது.
அதன்பின் இருவரும் மிகவும் நெருக்கமான தோழிகளாகி விட்டனர். பரத் காளீஸ் வீட்டுக்கு போகாதவாறு அவனை கண் கொத்திப் பாம்பாக கவனிக்க ஆரம்பித்தாள்..!! இதனால் அவர்களுக்குள் மீண்டும் விரிசல் விழுந்தது. ராசு அறிவுரை சொன்ன மாதிரி எல்லாம் இந்த விசயத்தில் அவளால் விட்டுக் கொடுத்து போக முடியாது என்று தோன்றியது. சண்டை மீண்டும் வலுக்கத் தொடங்க.. பரத் நிறையக் குடிக்க ஆரம்பித்தான் ….. !!!
பரத் அதிகமாக குடிக்க ஆரம்பித்து விட்டான். அதனால் அவனுடன் இன்னும் அதிகமாக சண்டை போட்டாள் பாக்யா. அப்படி சண்டை நடக்கும் ஒரு சில நாட்கள் அவன் வீட்டுக்குக்கூட வர மாட்டான். அவனுடைய அம்மா வீட்டில் தங்கிக் கொள்வான்.! இதற்கு மேலும் ஏதாவது அவனை திட்டினால்.. அவன் மொத்தமாக பாக்யாவை விட்டு விட்டு போய் விடுவான் என பயந்த அவளது பெற்றோர்.. பாக்யாவைத்தான் அடக்க முயன்றனர்.! அது அவளுக்கு இன்னும் அதிக கோபத்தைக் கொடுத்தது..!! ஆனால் வேறு வழியும் இல்லாமல் அவனுடன் வாழ வேண்டியிருந்தது..!!
